மதுபோதையில் தீக்குளித்த தந்தை | காப்பாற்ற முயன்ற மகளும் படுகாயம்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

x

வாலாஜாபேட்டையைச் சேர்ந்த CRPF வீரர் ஏழுமலை, ஆவடியில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளன.

இந்நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ஏழுமலை, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர், மதுபோதையில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மூத்த மகள் சண்முகப்பிரியா, தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இதில், இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஏழுமலை 80 சதவீத தீக்காயத்துடனும், சண்முகப்பிரியா 50 சதவீத தீக்காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்