மனநலம் குன்றிய மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை

கேரளாவில் மனநலம் குன்றிய மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தைக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4 லட்ச ரூபாய் அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை, அவரது தந்தை கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் செய்து, கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், உறவினரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தந்தை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பான வழக்கு பத்தனம்திட்டா விரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், சிறுமியை கொடூரமான சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 4 லட்ச ருபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்