கர்ப்பிணி மருமகளுக்கு தீ வைத்த மாமனார் ? ...வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்

x

அரியலூரில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மாமனார் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் அபிராமி.

இவர் தன் மகனை கண்டித்ததால் மாமியார், மாமனார் அபிராமியை கண்டித்துள்ளனர்.

இதனிடையே உடலெங்கும் தீக்காயங்களுடன் அபிராமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடும்ப தகராறில் மாமனார் தன்னை காலணியால் அடித்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக அபிராமி வாக்குமூலம் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனார் கலியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்