வீட்டினுள் தந்தையும், மகளும் சடலமாக மீட்பு..கேரளாவில் அதிர்ச்சி..

வீட்டினுள் தந்தையும், மகளும் சடலமாக மீட்பு..கேரளாவில் அதிர்ச்சி..
x

கேரளாவில் வீட்டினுள் தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயத்தில் ஆயர்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ஜோசப். இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், மாற்றுத்திறனாளியான இளைய மகள் ஜின்சியுடன், ஜார்ஜ் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணமாகி சென்ற மூத்த மகள் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டும் முடியாததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, கட்டிலில் ஜின்சி உயிரிழந்த நிலையிலும், கழிவறையில் ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்