திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசாருடன் தள்ளுமுள்ளு - சென்னையில் பரபரப்பு

x

சென்னை கிண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளால், போக்குவரத்து பாதித்தது. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என கூறி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி சென்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் கிண்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தங்க வைத்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கிண்டி அண்ணா சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதித்தது.


Next Story

மேலும் செய்திகள்