தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பம் - கலெக்டர் அலுவலகம் முன் அதிர்ச்சி

x

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த 3 ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மண்னெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துடியலூர் பகுதியில் உள்ள பாஜக ஆட்டோ ஸ்டேண்டில் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் ஆனந்த குமார், ரகு, அகமது ஆகிய மூவரையும், மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்ட விடாமல் பிரச்னை செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த 3 பேரும், உடன் வந்த ஆனந்த குமாரின் தாய் லட்சுமியும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார், தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்