குடும்ப சண்டையின் உச்சத்தில் பூச்சி மருந்து குடித்த மாணவர்... கடலூரில் நடந்த பகீர் சம்பவம்

x

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, குடும்ப சண்டை காரணமாக இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தம்பிக்குநல்லான் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சந்திரசேகர், சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், கல்லூரி முடிந்து வீடு திரும்பிய அவர், திடீரென ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக, வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்