கேரளாவில் நிதி பரிவர்த்தனை தொடர்பாக நடிகர் ஃபஹத் ஃபாசிலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் பெற்றுள்ளனர்.

x
  • கேரளாவில் நிதி பரிவர்த்தனை தொடர்பாக நடிகர் ஃபஹத் ஃபாசிலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் பெற்றுள்ளனர்.
  • கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் ஆன்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • இந்த சோதனையின் தொடர்ச்சியாக, கடந்த 17 ஆம் தேதி நடிகர் மோகன்லாலிடம் வருமான வரிமான வரித்துறையினர் விளக்கம் பெற்றனர்.
  • இந்நிலையில், தற்போது நடிகர் ஃபஹத் பாசிலிடம் நிதி பரிவர்த்தனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் பெற்றுள்ளனர்.
  • இதனிடையே, மலையாள திரையுலகில் 225 கோடி கருப்பு பண பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வரி செலுத்த வேண்டிய 72 கோடி ரூபாய் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்