முன்னாள் துணை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கல் வீச்சு.. - பெண் காவலர் படுகாயம்..

x

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர், தாலுகா அலுவலம் சென்றார். தொண்டர்கள் படை சூழ வேட்பு மனுத்தாக்கல் செய்ய முற்பட்ட போது, கூட்டத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டன. இது அந்த அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் மீது விழுந்தது. கல்வீச்சில் பெண் காவலர் காயமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கல் வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்