ஒரு நொடியில் எல்லாம் போச்சு.. தரைமட்டமான பழுதடைந்த நீர்தேக்க தொட்டி!

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் பழுதடைந்த மேல்நிலை தேக்க தொட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு கட்டப்பட்ட 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்த காரணத்தால், 32ஆயிரம் செலவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. சமூகவலைதளங்களில் பரவும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என்றும், நீர்த்தேக்க தொட்டி உரிய பாதுகாப்புடன் தரைமட்டமாப்பட்டது என ஊராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்