"எல்லோருக்கும் எல்லாமும்" - புத்தகங்கள், இலச்சினையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
- தமிழகத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடக கணக்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- 2030ஆம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை தமிழகத்தில் முழுவதுமாக அடைவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
- இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- தொடர்ந்து, நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடக கணக்குகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story