ஈரோடு இடைத்தேர்தல்: யாருக்கு ஆதரவு? சரத்குமார் இன்று ஆலோசனை

x

சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல், வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின தலைவர் சரத்குமார் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

காணோளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களின் நிலைப்பாடு குறித்து அறிந்த பின்னர் முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவம் மக்கள் கட்சி கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்