ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... அதிமுகவுக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பாஜக ஆதரவு தரும் அதிமுக வேட்பாளருக்கு, புதிய நீதிக் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் முழு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், ஏ.சி.சண்முகத்தின் சமூகத்தைச் சேர்ந்த 82 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்