"அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்பு" - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன்

x

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் தெரிவித்து உள்ளார்.

டி.என்.பி.எல். 7வது சீசனுக்கான வீரர்கள் ஏலம், மாமல்லபுரத்தில் 2வது நாளாக இன்று நடைபெற்றது.

ஏலம் முடிந்த பின்பு 8 அணிகளின் உரிமையாளர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன், திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்