ஊதியம் கேட்ட இளம்பெண் தனிமையில் வர வற்புறுத்திய இன்ஜினியர் | Salem

x

சேலத்தில் இளம்பெண்ணை தனிமையில் வர வற்புறுத்திய இன்ஜினியரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஸ்தம்பட்டி அருகே உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சங்கர். இவரது நிறுவனத்தில் சின்ன திருப்பதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 10 மாதங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் பணியிலிருந்து விலகி வேறோரு நிறுவனத்தில் சேர்ந்த நிலையில், தனக்கு தர வேண்டிய ஊதியம் குறித்து சங்கரிடம் செல்போனில் கேட்டுள்ளார். ஆனால், சங்கர் ஊதியம் வேண்டுமெனில் தனிமையில் வர வற்புறுத்தி பேசியுள்ளார். இது தொடர்பாக சமூக நலத்துறை விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை அளிக்க முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்