எதிரிக்கு எதிரி நண்பன்...ஆம் ஆத்மி எம்.பி.க்கு சோனியா ஆதரவு...காரணம் இது தான்...

x

சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மாநிலங்களவை நடவடிக்கைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வந்த சோனியாகாந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களையும் சந்தித்தார்.


Next Story

மேலும் செய்திகள்