நாளை இருக்கு சம்பவம்...இன்று மோதிக்கொண்ட பகையாளிகள் - காவல்நிலையத்தில் களேபரம் | Uttar Pradesh

x

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், அமேதி மாவட்டத்தில், பா.ஜ.க. - சமாஜ்வாதி கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ராகேஷ் பிரதாப் சிங், தனது ஆதரவாளர்களுடன், கௌரிகஞ்ச் நகராட்சி வேட்பாளர் ரஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை காவல் நிலையத்திலேயே தாக்கியுள்ளார். தீபக்சிங், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, சமாஜ்வாதி ஆதரவாளர்களை தாக்கியதாக ராகேஷ் பிரதாப் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இருதரப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கவுரிகஞ்ச் நகராட்சியில் பதற்றம் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்