வங்கிக் கடன் மூலம் வாங்கப்பட்ட கார் - தவணைத் தொகையை கட்டிய பின்னும் பறிமுதல்

x
  • ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கடன் தவணைத் தொகையை கட்டி வரும் நிலையில், முறையான அறிவிப்பின்றி காரை எடுத்துச் சென்றதாக தனியார் வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • உலகநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு, கார் வாங்குவதற்காக தனியார் வங்கியிடம் இருந்து 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு முறையான அறிவிப்பின்றி அவருடைய வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
  • இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார்.
  • அதில், தொடர்ந்து மாத தவணைகளை முறையாக செலுத்தி வந்தபோதிலும், தனது காரை வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
  • அந்த புகாரின்பேரில், தனியார் வங்கியின் மேலாளர் மற்றும் கலெக்சன் மேலாளர் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்