விவசாயத் தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை - விவசாயி சம்பவ இடத்திலேயே பலி

x
  • சிந்தலவாடம் பட்டி ராமபட்டினம் புதூரைச் சேர்ந்த 52 வயதான தண்டபாணி, தனது தென்னந்தோப்பில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்...
  • நள்ளிரவு மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை தண்டபாணியைக் கடுமையாகத் தாக்கியது... இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்...
  • இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
  • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒற்றைக்காட்டு யானை சில நாட்களாக சுற்றி வரும் நிலையில், ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானையைக் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்