அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக கேட்கும் கல்வித் துறை

x
  • சரியாக பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
  • தொடக்கக் கல்வித் துறை இயக்குனர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
  • அதில், துறையின் கீழ் இயங்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட காலமாகவே பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள், அதிக கால விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுக்கக்கூடிய ஆசிரியர்களின் விவரங்களை மிக அவசரமாக கருதி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்