இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி... சென்னையில் எரிபொருள் நிரப்பி கொள்ளும் இலங்கை விமானங்கள்

x

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விமானங்களுக்கான எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய தொலைதூர நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு போதுமான எரிபொருள் கிடைப்பது சவாலாக இருந்து வருகிறது. இதனையடுத்து இலங்கை விமானங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக விமானத்தில் எரிபொருள் நிரப்ப பட்டு, அந்த விமானம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்த விமானத்தில் இருந்து சிறிய விமானங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்