முழு போதையில் மயங்கி கிடந்த பெண்.. அனாதையாக கதறிய பச்சிளங்குழந்தைகள் - சென்னை மெரினாவில் பரபரப்பு

x

சென்னை மெரினா கடற்கரையில், இரண்டு கை குழந்தைகளுடன் மதுபோதையில் இருந்த பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சுயநினைவின்றி இருந்த பெண்ணை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த பெண்ணின் ஆறு மாத ஆண் குழந்தை, இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதனிடையே, மதுபோதையில் இருந்த பெண், இரண்டு குழந்தைகளை மீட்ட சமூக ஆர்வலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சிகிச்சை முடிந்த பிறகு, அந்த பெண் யார்?, என்பது குறித்து தெரியவரும் என போலீசார் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்