சீருடையில் மதுபோதையில் பள்ளி மாணவிகள்.. விசாரணையில் திடீர் திருப்பம் - சிக்கிய தோழர்

x

கரூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த 3 மாணவிகள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் அவர்கள் சிறப்பு தேர்வு எழுத சென்றனர். தேர்வை முடித்து விட்டு 3 பேரும் வந்த நிலையில் அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர் அவர்களுக்கு ஒயின் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை குடித்த மாணவிகளில் ஒருவர் வீட்டிற்கு சென்ற நிலையில் மற்ற 2 பேர் மயங்கிய நிலையில் சாலையில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனிடையே தினேஷ் என்கிற தீனா மாணவிகள் 3 பேரையும் மதிய உணவுக்காக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒயின் குடிக்க வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்