"போதை ஏறி போச்சு... புத்தி மாறி போச்சு" -120 அடி உயர பனை மரத்தில் உறங்கிய மதுபிரியர் - பொள்ளாச்சியில் பரபரப்பு சம்பவம்

x

பொள்ளாச்சி அருகே ஆவல் சின்னாம்பாளையம் பகுதியில், மதுபோதையில் பனை மரத்தின் மீது ஏறி உறங்கிய மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. ஜமீன் கோட்டாம் பட்டி பிரிவு பகுதியில், சாலையோரம் உள்ள 120 அடி உயரம் கொண்ட பனை மரத்தின் மீது, ஒருவர் உறங்கிக் கொண்டிருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போராடி, இரும்பு கூண்டு பொருத்தப்பட்ட ராட்சத கிரேன் மூலம் அந்த நபரை மீட்டு, பத்திரமாக கீழே கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆனைமலையை சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் என்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்