மதுபோதையில் நடந்த விபரீதம்... ஓவர் ஸ்பீடில்...வீட்டில் புகுந்த கார்.. போலீசார் எடுத்த நடவடிக்கை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், குடிபோதையில் ஒருவர் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு கிரீம்ஸ் சாலையில் இருந்து கல்லூரி சாலை வழியாக அதிவேகமாக வந்த கார், டிபிஐ அலுவலகம் அருகில் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி, எதிரே இருந்த வீட்டின் சுற்றுச்சுவரில் இடித்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த மதுரை மணல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பேரரசன் மற்றும் உடன் பயணித்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் காரில் இருந்த ஏர் பேக்கால் காயமின்றி உயிர் பிழைத்தனர். மது போதையில் காரை ஒட்டிய பேரரசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்