தியேட்டரில் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்த மதுப்பிரியர்கள்.. தீயாய் பரவும் வீடியோ

x

மது அருந்திவிட்டு திரைப்படம் பார்க்க வந்தவர்களை அனுமதிக்க மறுத்த திரையரங்க உரமையாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திருச்செந்தூரில் அரங்கேறியுள்ளது.

திருச்செந்தூர் அமலி நகரில் உள்ள திரையரங்கிற்கு மது அருந்திவிட்டு வந்த நபர்களை, அதன் உரிமையாளர் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்ந்து இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பிச்சினையை போலீசார் தீர்த்து வைத்துள்ளனர். இந்த நிலையில், மீண்டும் அதே நபர்கள் 15 பேர்களுடன் திரையரங்கிற்கு வந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி உரிமையாளர் மற்றும் பணியாளர்களை மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என திரையரங்க உரிமையாளர் வைத்துள்ள பேனர் கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்