“ஏய்... நான் விஷ நாகப் பாம்பு..“ - போலீசை பாடாய் படுத்திய மது வெறியர்- பஸ்க்குள் VIBE.. பெட்ரூமான நடுரோடு

x

சேலத்தில் போதை ஆசாமி ஒருவர் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் போலீசாரிடம் அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.... என்ன நடந்தது? பார்க்கலாம்...

நல்லது செய்வோம்... நல்லது நினைப்போம்... எனக்குனு ஒரு அன்பு இருக்கு என நல்ல கருத்துகளைக் கூறினாலும், இவர் இருப்பது உச்சக்கட்ட மதுபோதையில்...

சேலத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அரசு பேருந்து புறப்பட்டு உள்ளது. அம்மாபேட்டை அருகே பேருந்து சென்றபோது, அதில் பயணித்த ஒருவர் மதுபோதையில் டிக்கெட் எடுக்க மறுத்து, நடத்துனருடன் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட, போதை ஆசாமியை படாத பாடுபட்டு பயணிகள் உதவியுடன் ஓட்டுநரும் நடத்துனரும் இறக்கிவிட்டனர்.

ப்ரீத் கீழே இறக்கிவிடும் காட்சிகள் (கெட்ட வார்த்தைகள் பீப்)

பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட பிறகு, பேருந்தின் முகப்பை தட்டியும் ஓட்டுநரைத் தாக்க முயன்றும் தொடர் ரகளையில் ஈடுபட்டார் போதை ஆசாமி...

நிலைமை எல்லை மீறி செல்ல அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்த பிறகு ஃபுல் ஃபெர்மான்ஸ் மோடிற்குச் (full performance mode) சென்றார் அந்த போதை ஆசாமி....

மை லைசென்ஸ்... என்னோட 20 லட்சம் பணம் என ஏதேதோ உளறிக்கொட்டிய அவர், போலீசாரிடமும் நல்லது செய்வோம், நல்லது நினைப்போம் எனக் கூற என்ன செய்வதென்று புரியாமல் நின்றனர் போலீசார்....

இதன்பிறகு பேருந்தை போலீசார் எடுக்கச் சொல்ல, தனது பங்கிற்கு விசிலடித்து பேருந்தை வழியனுப்பி வைத்தார் அந்த போதை ஆசாமி...

இத்துடனாவது போதை ஆசாமி அலப்பறையை நிறுத்திக்கொள்வார் என நினைத்தால் இல்லை.... இதன்பிறகு அவர் செய்ததுதான் ஹைலைட்,... நான் படுக்கப் போறேன் எனக் கூறியபடி போலீசாரை தள்ளிவிட்டு ஓடிய போதை ஆசாமி, ஹாயாக நட்ட நடுரோட்டில் படுத்தார்.

அவரை அங்கிருந்து இழுத்து வந்த போலீசார், வண்டியில் ஏற்ற முயன்றனர். அப்போதும் அலப்பறை செய்த போதை ஆசாமி, சேலம் மாவட்ட மக்களே என்னை துன்புறுத்துறாங்க எனக் கூவினார்.

தான் செய்த சம்பவங்கள் அனைத்தையும் ஓவர்டேக் செய்யும் வகையில்,,, தான் விஷ நாகப் பாம்பு என அவர் உளறியது அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது.

அரை மணி நேரத்திற்கும் மேலாக படாதபாடு பட்டு ஒரு வழியாக போதை ஆசாமியை வாகனத்தில் ஏற்றி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் போதை ஆசாமி தர்மபுரியைச் சேர்ந்த முரளி என்பதும், லாரி ஓட்டுநர் என்பதும் தெரியவந்துள்ளது.

தலைக்கேறிய மதுபோதையில் இவர் அலப்பறையில் ஈடுபட்டது சிரிப்பை ஏற்படுத்தினாலும், மதுவால் நிகழும் பிரச்சினைகளுக்கு இச்சம்பவம் சிறு உதாரணம்...


Next Story

மேலும் செய்திகள்