ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்... சாலையோர தடுப்பு கம்பியில் மோதி விபத்து - 2 பேர் பலி, 7 பேர் படுகாயம்

x

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.

பிரான்சில் குடும்பத்தாரோடு வசித்துவரும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனிடையே, இவர் குடும்பத்தோடு சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேனில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர தடுப்பு கம்பியில் மோதியது.

இதில் தடுப்பு கம்பி வேனுக்குள் புகுந்து வெளியே வந்ததில், வேனில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர்.

7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்