ஜாதி மோதலாக மாறிய குடிநீர் தகராறு ..ஆப்ரேட்டர் மீது கொடூர தாக்குதல் தர்மபுரியில் பரபரப்பு

x

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, குடிநீர் பிரச்னை தொடர்பாக, சாதி பெயரை கூறியதால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

கொல்லஅள்ளி காலனியை சேர்ந்த கேசவன் என்பவர், பஞ்சாயத்து குடிநீர் டேங்க் ஆபரேட்டராக இருந்து வரும் நிலையில், சோமனஅள்ளியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேசவனிடம் கேள்வி எழுப்பிய சோமனஅள்ளியை சேர்ந்த குண்டன் என்பவர், சாதி பெயரை கூறி தாக்கியதாக தெரிகிறது. மேலும், கேசவனின் வீட்டுக்கு சென்ற குண்டனின் உறவினர்கள், அவரது தாய், சகோதரர், நண்பர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த இரு சமூகத்தினரும் சோமனஅள்ளி கிராமத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதால், மாவட்ட எஸ்.பி., தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தாக்குதலுக்கு ஆளான கேசவன், அவரது தாய் உள்ளிட்டோர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்