கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி.... நாளை வரை கொட்டப்போகும் மழை

x

கேரள கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையின் பல இடங்களில் நள்ளிரவில் மிதமான மழை பெய்தது.

சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, மயிலாப்பூர், அடையார், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது.


Next Story

மேலும் செய்திகள்