டபுள் டக்கர் மின்சார பேருந்து.. இனி பயண நேரத்தை சுலபமாக்கும்

x

டபுள் டக்கர் மின்சார பேருந்து.. இனி பயண நேரத்தை சுலபமாக்கும்


மின்சார சொகுசு பேருந்துகள் மூலமாக, பயண நேரத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்ச்ர் நிதின் கட்கரி கூறினார்.

நாட்டிலேயே முதல் முறையாக இரட்டை அடுக்கு மின்சார பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மும்பையில் இந்தப் பேருந்தின் சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மின்சர சொகுசு பேருந்துகள் மூலமாக, மும்பையில் இருந்து டெல்லி செல்லும் பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றார். நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்