"சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதிக்கும் பொருந்துமா?" -"RTI மூலம் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கேள்வி"

x

சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி, மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகமும், ஆதி திராவிடர் சமூகமும் சம அந்தஸ்தில் உள்ளனரா? அப்படியானால் சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகத்தினர் கழிப்பிடங்களில் துப்புரவு பணியாளர்களாக நியமிக்கப்படுவார்களா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக துரைசாமி தொடர்ந்த வழக்கில், அவரது கேள்விகளுக்கு, ஆளுநர் அலுவலக மேல்முறையீட்டு ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்