ஐபிஎல் போட்டியை நேரில் பாக்கணுமா..?அதுவும் இலவசமாக...சிஎஸ்கே வெளியிட்ட சூப்பர் ஆஃபர்

x

நடப்பு ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 30ம் தேதி நடைபெறவிருக்கும் சென்னை - பஞ்சாப் இடையிலான போட்டியை இலவசமாக காண

மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியை சேர்ந்த சுமார் 750 ரசிகர்களுக்கான பயணச் செலவு, தங்கும் செலவு, உணவுச் செலவை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்றுக்கொள்ள உள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் 18 வயது மேல் உள்ள ரசிகர்கள் அதிர்ஷ்ட குலுக்கல் முறையிலும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் நடைபெறும் நேரடி ரசிக போட்டிகளில் பங்குபெறலாம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்