'மாமன்னன்' படம் பார்க்க வந்த திமுகவினர் தியேட்டரில் ரகளை - பரபரப்பு காட்சிகள்

x

தூத்துக்குடியில் 'மாமன்னன்' திரைப்படம் பார்க்க வந்த திமுகவினர், திரையரங்கில் ரகளை செய்ததுடன், தட்டிகேட்ட போலீசாரையும் தரைக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் மாமன்னன் திரைப்படத்தினை, திமுக நிர்வாகிகள் சிலர் பார்வையிடச் சென்றனர். அப்போது, சிலருக்கு மட்டுமே டிக்கெட் எடுத்துவிட்டு திரையரங்கில் நிறைய பேர் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் மது அருந்திவிட்டு திரையங்கிற்கு வந்ததுடன், பணம் கொடுக்காமல் உணவுப் பொருட்களை கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து வந்து திரையரங்கு உரிமையாளரிடமும் வாக்குவாதம் நடைபெற்றதால், செல்போனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் திரையரங்கிற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அங்கிருந்த திமுகவினர், போலீசாரிடமும் வாக்குவாதம் செய்ததோடு, தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள், படம் பார்க்க முடியாமல் பாதியிலேயே சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்