தப்பை தட்டிக்கேட்ட கவுன்சிலரை தாக்கிய பாஜகவினர்.. கடையையும் அடித்து உடைத்ததால் பரபரப்பு

x

நாகை மாவட்டத்தில், பட்டாசு வெடித்தபோது, தனது பெட்டிக்கடை சேதமடைந்ததை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர், பாஜகவினரால் தாக்கப்பட்டார்.

அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விஜேந்திரன் என்பவரை மாவட்ட செயலாளராக பாஜக தலைமை அறிவித்தது. இதை, டாடா நகர் மீனவ கிராமத்தில் பாஜகவினர் வெடி வெடித்து கொண்டாடினர். பட்டாசு வெடித்ததில், திமுக கவுன்சிலரான ஞானமணி என்பவரின் பெட்டிக்கடை சேதம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமணி, தனது உறவினர்களுடன் சென்று பாஜகவினரைத் தட்டி கேட்டுள்ளார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், பாஜகவினர் தாக்கியதில் ஞானமணிக்கு காதில் காயம் ஏற்பட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த ஐந்து பேரும் உள்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்