தீபாவளி எதிரொலி : களைகட்டிய ஆட்டுச்சந்தை... ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை...!

x

தீபாவளியை முன்னிட்டு ஓமலூர், சின்னதிருப்பதி ஆகிய பகுதிகளில் ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் சின்னதிருப்பதி ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை விற்பனை நடைபெறும்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு சந்தையில் நடைபெற்ற விற்பனையில் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக தகவல் கூறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்