பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம்... நாகப்பட்டினத்தில் பரபரப்பு

x

நாகையில் பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இரண்டு பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அறியப்பட்டவர். இந்நிலையில், நாகையில் பிரதமர் மோடிக்கு எதிரான துண்டு பிரசுரங்களை நந்தினி மற்றும் வழக்கறிஞர் நிரஞ்சனா ஆகியோர் விநியோகித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது பாஜகவினருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் இருவரையும் மதுரைக்கு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்