மன உளைச்சலில் இருந்த அரசு ஊழியர்...மர்மமாக பஸ்சில் இறந்து கிடந்த அதிர்ச்சி - தீவிர விசாரணையில் போலீசார்

x

கன்னியாகுமரி பேருந்து நிலைய பணிமனையில் பணியாற்றி வந்த அரசு ஊழியர், பேருந்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநராக இருந்து வந்த ஏசுதாஸ் என்பவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தொழில்நுட்ப பிரிவில் உதவியாளர் பணிக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில், ஏசுதாஸ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில், கடந்த சில மாதங்களாக பணிச்சுமை காரணமாக, ஏசுதாஸ் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்