"கூப்பிட்டும் வரலையா..?" போடு பிடிவாரண்ட்.. நீதிபதிகள் அதிரடி | Arrest Warent | Madras Highcourt

x

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. .

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது

திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு ஜாமீனுடன் கூடிய பிடிவாரண்டை பிறப்பித்தார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஜனவரி 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்