சத்துணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு - புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்

சத்துணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு - புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்
x

புதுக்கோட்டையில் 25 குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் சமையலர் மீரா பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை சந்தப்பேட்டை நகராட்சியில் உள்ள தொண்டைமான் நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அங்கன்வாடி மையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சத்துணவு மாதிரிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.சத்துணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு - புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்


Next Story

மேலும் செய்திகள்