டயமன்ட் லீக்.. மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

x

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, காதலித்து திருமணம் செய்த பெண்ணை ஏற்க மறுத்ததால், கணவர் வீட்டார் முன்பு பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர், அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்ற இளைஞரை, கடந்த ஜூலை 15ம் தேதி காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால். மோகன்ராஜின் குடும்பத்தினர், சிவரஞ்சனியை ஏற்க மறுத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. விரக்தி அடைந்த சிவரஞ்சனி, கணவர் மோகன்ராஜ் வீட்டின் முன்பு அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலின் பேரில் வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணை சமாதானப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்