"பணமென்ன பணம்... நமக்கு ஐஸ்கிரீம் தான் முக்கியம்" - திருடிய கடையிலேயே ஹாயாக ஐஸ்கிரீம் சாப்பிட்ட தீனிப்பண்டார திருடன்..!

x

தர்மபுரி அருகே கொள்ளையடித்த கடையிலேயே, கொள்ளையன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிரீம் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். அதுமட்டுமல்லாமல், திருடிய கடையிலேயே, திருடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மேலும், அதே பகுதியில் உள்ள கம்பியூட்டர் சென்டர், மளிகை கடை, துணிக்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்