டாஸில் தோனி வெற்றி.. வினை வைத்த மழை.. CSK, லக்னோவு-க்கு 1 பாய்ண்ட்

x

லக்னோவில் மழை காரணமாக தாமதமாக டாஸ் போடப்பட்ட நிலையில், டாசில் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த லக்னோ அணியின் வீரர்கள், சென்னை அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ரன் சேர்க்க தடுமாறினர். 19.2 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்