அறுவை சிகிச்சைக்கு பின் சொந்த ஊர் திரும்பிய தோனி. ஓடி வந்து நலம் விசாரித்த 'Old Friend'

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சி சென்றடைந்தார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தோனிக்கு மூட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மும்பையில் சில நாட்கள் அவர் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் தோனி ராஞ்சி சென்றடைந்தார். முன்னதாக மும்பை விமான நிலையத்தில் முன்னாள் வீரர் முகமது கைஃப் தோனியை சந்தித்துப் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்