களை கட்டிய தசரா விழா - வண்ண விளக்குகளால் ஜொலித்த மைசூரூ அரண்மனை | ரசித்து பார்த்த மக்கள்

x

களை கட்டிய தசரா விழா - வண்ண விளக்குகளால் ஜொலித்த மைசூரூ அரண்மனை | ரசித்து பார்த்த மக்கள்


கர்நாடகா மாநிலத்தில் தசரா விழாவை ஒட்டி மைசூரூ அரண்மனை வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக தசரா விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தசரா விழாவை ஒட்டி, மைசூரு அரண்மனை, அரசு கட்டிடங்கள், பழங்கால கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை ரசித்து பார்த்து உற்சாகமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்