டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு... தமிழக அரசு உத்தரவு

x

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வாலுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையின் டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவை, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்