"ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தும் கைது பண்ணிட்டாங்க.. எனக்கு பட படன்னு வருது.." - பட்டாசு ஆலை உரிமையாளர் பேசிய பகீர் ஆடியோ

x

ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்ட விரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட நபர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தில் உள்ள சிவராஜ் பயிரோடெக் நிறுவனத்தில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. அது தொடர்பான புகாரின் பேரில், பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம் மற்றும் ஆலை போர் மேன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராஜமாணிக்கம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்