ஓட்டுனர்கள் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்கள் வடிவமைப்பு.. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

x

ஓட்டுனர்கள் இன்றி மெட்ரோ ரயில்கள் தானாக இயங்கும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிதாக அமையவுள்ள மூன்று வழித்தடங்களிலும் ஓட்டுனர்கள் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தற்போது நடைபெறுகிறது.

இதற்கான திட்டப்பணிகள் அனைத்தும் வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில் மூன்று வழிதடங்களிலும் ஓட்டுநர் அல்லாது தானியங்கி முறையில் ரயிலை இயக்கும் வகையில் ரயில் பெட்டிகளை தயாரிப்பு செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்