மத்திய அரசின் திட்டங்களை வலியுறுத்த திமுக எம்பி-க்கள் துறை வாரியாக நியமனம்

x

மத்திய அரசு முன் மொழிந்த உள்ள திட்டங்களை வலியுறுத்த திமுக எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுரை ஆணையருக்கு தமிழக பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்ட சில மத்திய அரசுத் துறைகளுக்கென்று எம்.பி.க்களை நியமித்து முதலமைச்சர் அங்கீகரித்துள்ள கடிதம் மற்றும் பட்டியலை அனுப்பி இருப்பதாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் முன் மொழிவுகளை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து கேட்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதன்படி, மத்திய பாதுகாப்புத் துறைக்கு ஜெகத் ரட்சகன், அந்தியூர் செல்வராஜ், உள்துறைக்கு டி.ஆர்.பாலு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு ராசா, நிதித்துறைக்கு கனிமொழி, வேளாண்மைத் துறைக்கு பழனி மாணிக்கம், வெளியுறவுத் துறைக்கு தயாநிதி மாறன், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு திருச்சி சிவா, நுகர்வோர் விவகாரம், சிவில் சப்ளைஸ், உணவுத் துறைக்கு சண்முகம் மற்றும் ஞானதிரவியம்,

உள்ளிட்டோரை நியமித்துள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்