குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை மறுப்பு - ஆசிரியர்களுடன் பெற்றோர் வாக்குவாதம்

x

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறைந்த மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களை பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்கு மறுப்பதாகவும், அவர்களை அரசு ஐடிஐயில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர், ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அனைத்து மாணவர்களையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வதாக ஆசிரியர்கள் கூறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்